திரு அருணாசலம் பேரம்பலம் – மரண அறிவித்தல்




திரு அருணாசலம் பேரம்பலம்

யாழ். இளவாலை காடிவளையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அருணாசலம் பேரம்பலம் அவர்கள் 30-09-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம் சம்பரம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நடராசா கனகமணி தம்பதிகளின் மருமகனும்,ஈஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், சின்னப்பிள்ளை, தவமணி ஆகியோரின் சகோதரரும்,சுகுமாரன், காலஞ்சென்ற லவக்குமார், சோபனா ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,சயந்தினி, சசீஸ்வரன் ஆகியோரின் மாமனாரும்,பிரவீன், கவினா ஆகியோரின் அப்பப்பாவும்,அபினா, தசானா, வைசன் ஆகியோரின் அம்மப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-10-2022 திங்கட்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சேந்தாங்குளம் காளியானை இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்,
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
ஈஸ்வரி – மனைவிMobile : +94770794263
சுகுமாரன் – மகன்Mobile : +447473847639
சோபனா – மகள்Mobile : +447532809538

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu